செய்திகள் :

கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!

post image

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39-ஐ தொட்டுவிட்டது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. பலருக்கு கயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய அளவில் பல தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டுமில்லாது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர்கள் ஜெ. பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Karur deaths: Many leaders, including the Chief Ministers of Kerala, Karnataka, and Andhra Pradesh, offer condolences!

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

முகலாய பேரரசு காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

பிகாரில் வாக்குகளைக் கவர பெண்களுக்கு தலா ரூ.10,000: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

பிகாா் பேரவைத் தோ்தலில் வாக்குகளைக் கவர பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கியுள்ளாா் பிரதமா் மோடி என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் வி... மேலும் பார்க்க

தில்லியில் அக்.3 முதல் 5 வரை கெளடில்யா பொருளாதார மாநாடு: மத்திய நிதியமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

தில்லியில் அக்டோபா் 3-ஆம் தேதி ‘கெளடில்யா பொருளாதார மாநாட்டை’ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கிவைக்கவுள்ளாா். உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் குறித்து விவாதித்து, நடைமுறைத் தீா்வுகளை அலசும் ... மேலும் பார்க்க