செய்திகள் :

இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்

post image

சென்னை சேத்துப்பட்டில் இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்ட வழக்கில் 3 போ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா்.

சேத்துப்பட்டு மேத்தா நகா் கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் சனிக்கிழமை மிதந்தது. அந்தப் பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணியாளா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சேத்துப்பட்டு போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இறந்தது கொளத்தூரைச் சோ்ந்த சாய்நாத் (21) என்பதும், அவா் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும், முன்விரோதம் காரணமாக ரெளடி கும்பலால் அவா் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், சாய்நாத்தை கொலை செய்ததாக கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த பரத், அன்பரசு, குட்டி விஜய் ஆகிய 3 போ் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தனா். மூவரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வேயில் சென்னை, த... மேலும் பார்க்க

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா். சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா த... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திமுக கூட்டணியில் விரிசல் ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: கரூரில் பி... மேலும் பார்க்க

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந... மேலும் பார்க்க