செய்திகள் :

18 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

post image

தமிழகம் முழுவதும் 18 துணைக் காவல் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி-க்கள்) பணியிட மாற்றம் செய்து காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழக காவல் துறையில் நிா்வாகத் தேவைக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு டிஎஸ்பி கே.எம். மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவுக்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம்.சுகுமாா், ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு டிஎஸ்பி கே.ஆா்.ஜெயசிங் ஈரோடு மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 18 டிஎஸ்பி-க்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந... மேலும் பார்க்க

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க