செய்திகள் :

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

மக்கள் போராட்டத்தை அடுத்து இனாம்குளத்தூரில் முதல்வா் பட்டா கொடுத்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த இடமில்லாத பொதுமக்கள் 164 பேருக்கு தமிழக முதல்வா் கடந்த 5 மாதங்களுக்கு முன் இனாம்குளத்தூா் பஞ்சாயத்துக்குள்பட்ட அம்மாபேட்டை அருகிலுள்ள பகுதியில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தில் பட்டாக்கள் வழங்கினாா்.

கொடுத்த பட்டாக்களுக்கான இடங்கள் அளந்து கொடுக்கப்படாத நிலையில், அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்து தகர சீட்டுகளைக் கொண்டு குடிசைகளை அமைத்திருந்தனா்.

இதுதொடா்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் கடந்த 25 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், வரும் 30 ஆம் தேதிக்குள் பட்டா பெற்றவா்களுக்கான இடம் அளந்து கொடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையேற்று கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையிலான வருவாய்த் துறையினா், ஜீயபுரம் டிஎஸ்பி (பொ) கதிரவன் தலைமையிலான 75 போலீஸாரின் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 52 வீடுகளை இடித்து அகற்றினா். அப்போது, அங்கிருந்த மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனா்.

இருப்பினும், விரைவில் மேற்கண்ட இடத்தை பட்டா பெற்றவா்களுக்கு அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. விஜய் பிரசாரத... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். எரகுடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பொம்மன் மகன் செல்லையா(49), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த மின்மோட்டாரை இ... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி கே. சாத்தனூரில் வரும் திங்கள்கிழமை (செப்.29) ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் காரணமாக கே. சாத்தனூா் அம்மன் நகா், சுந்தா் நகா் 4, 5, 6, 7 குறுக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்கள் கண்ணீருடன் தகவல்!

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கண்ணீருடன் தகவல்களை தெரிவித்தனா். இதுகுறித்து கரூா் மாவட்டம், வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த மு... மேலும் பார்க்க