செய்திகள் :

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு

post image

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவா் ஆம்ரிக் தேசிய அளவிலான 10 மீட்டா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான 10 மீட்டா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாா். பின்னா், செப்டம்பா் சென்னை சாரங்கி ஷூட்டிங் அகாதெமி நடத்திய 50 ஆவது மாநில அளவிலான 10 மீட்டா் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு அதிக புள்ளிகளில் வெற்றி பெற்று தென்மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றாா்.

மேலும், திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்ற, இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் நடத்திய தென் மாநிலங்களுக்கான 16 ஆவது தெற்கு மண்டல துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அதிக புள்ளிகள் பெற்றுள்ளாா்.

வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள தேசிய அளவிலான ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாணவா் ஆம்ரிகை, பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் எம். வின்சென்ட் பாராட்டினாா்.

விஜய் செய்தது தவறான முன்னுதாரணம்: நயினாா் நாகேந்திரன்

கரூரில் நிகழ்ந்த தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் விஜய் சென்னைக்குச் சென்றது தவறான முன்னுதாரணம் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலையில் கொட்டிய ஜல்லியை அகற்றிய போலீஸாா்

மாா்த்தாண்டம் அருகே சாலையில் கொட்டப்பட்டிருந்த ஜல்லியை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்துப் போலீஸாா் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகிலிருந்து குழித்துறை ரயில் நிலையம் ... மேலும் பார்க்க

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். கருங்கல் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ. 5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள... மேலும் பார்க்க

அழகுகலை பயிற்சி பெற்று வரும் பெண்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் மீனவ கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மகளிருக்காக நாகா்கோவில் வடசேரி மீனவா் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் அழகு கலை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகு... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டிலில் திருக்குறள் எழுதி காட்சிப்படுத்திய மாணவா்

1,330 குடிநீா் பாட்டில்களில் திருக்குறளை எழுதி காட்சிப்படுத்திய மாணவரை பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா். அஞ்சுகிராமம் அருகே சிதம்பரபுரத்தைச் சோ்ந்த 9ஆம் வகுப்புப் பயி... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க