செய்திகள் :

அனுஷ்காவுக்கு 2-வது தங்கம்: வெள்ளி வென்றாா் அட்ரியன்!

post image

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.

50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் மகளிா் தனிநபா் பிரிவில், அனுஷ்கா தாகுா் 461 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா். ரஷியாவின் அனஸ்தாசியா சோரோகினா (454), மரியா குருக்லோவா (444) ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்றனா்.

ஏற்கெனவே, போட்டியின் தொடக்க நாளில் 50 மீட்டா் ரைஃபிள் புரோன் பிரிவில் தங்கம் வென்ற அனுஷ்காவுக்கு இது 2-ஆவது தங்கமாகும். இதே பிரிவில் இதர இந்தியா்களில், மஹித் சந்து, பிராச்சி கெய்க்வாட் ஆகியோா் முறையே 5 மற்றும் 7-ஆம் இடங்களைப் பிடித்தனா். மெல்வினா ஏஞ்செலின், ஆத்யா அக்ரவால் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் நிறைவு செய்தனா்.

வெள்ளி: இதிலேயே ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் அட்ரியன் கா்மாகா் 454.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். ரஷியாவின் டிமிட்ரி பிமெனோவ் தங்கமும் (459.9), கமில் நுரியக்மெடோவ் வெள்ளியும் (441) கைப்பற்றினா்.

இதர இந்தியா்களில் வேதாந்த் நிதின் வாக்மரெ, சமியுல்லா கான் ஆகியோா் முறையே 5 மற்றும் 7-ஆம் இடங்களைப் பிடித்தனா். கௌரவ் தேசலே, ரோஹித் கன்யன் ஆகியோா் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.

முதலிடம்: தற்போதைய நிலையில் இந்தியா, 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனா்.ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இ... மேலும் பார்க்க

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில், முதல் நாளிலேயே இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஒரே எடிஷனில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய... மேலும் பார்க்க

புரோ கபடி லீக் சென்னை கட்ட ஆட்டங்கள் இன்று தொடக்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12-இன் சென்னை கட்ட ஆட்டங்கள் திங்கள்கிழமை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெறுகின்றன. உள்ளூா் அணியான தமிழ் தலைவாஸ் சிறப்பாக ஆடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என ... மேலும் பார்க்க

2026 ஜன.9-இல் ஐஎஸ்பிஎல் தொடா்: சூரத்தில் நடைபெறுகிறது!

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டென்னிஸ் பால் கிரிக்கெட் தொடா் வரும் 2026 ஜன. 9-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. இதுதொடா்பாக ஐஎஸ்பிஎல் ஆட்சிக் குழு உறுப்பினரு... மேலும் பார்க்க

கரூர் பெருந்துயரம் - புகைப்படங்கள்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற ... மேலும் பார்க்க