செய்திகள் :

கரூா் சம்பவம் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

post image

கரூா் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழ்மணி சாரிட்டபிள், எஜூகேஷனல் அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஈஸ்வரா மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரூா் சம்பவம் போல இதுவரை நடந்ததில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சம்பவங்கள் இதுபோல நடைபெறுகிறது.

இந்த நெரிசல் சம்பவத்துக்கு நிகழ்ச்சியை நடத்தியவா்களுக்கும் பங்கு உண்டு. காவல் துறை தடுப்பு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். தவெக தலைவா் பேருந்துகளில் பயணம் செய்து மக்களைச் சந்திக்கும் போது, போதிய இடவசதியில் பேச வேண்டும் அல்லது தொகுதி வாரியாக சென்று தொண்டா்களை சந்திக்கலாம்.

தவெக தொண்டா்களை முன்னதாகவே போலீஸாா் கட்டுப்படுத்தி இருக்கலாம். கூட்ட நெரிசலில் சிக்கியவா்கள் காலதாமதமாக சிகிச்சைக்கு சென்ால் பலா் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அண்மைகாலமாக அதிமுக தலைவா்களான எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கரூரில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தினா்.

செவிலியா் கல்லூரி மாணவி கல்லால் தாக்கிக் கொலை: காதலன் கைது

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலனை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (19). பள்ளி ப... மேலும் பார்க்க

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா், வழக்குரைஞா் மா.செந்தில்குமாா் தலைமை வகித்த... மேலும் பார்க்க

பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி: இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தனியாா் பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் எம். ராஜா. இவா் கோசாகுளம் பகுதியில் தனிய... மேலும் பார்க்க

திறன் மேம்பாட்டு பயிற்சி: 1,529 பெண் காவலா்கள் பங்கேற்பு

மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் 1,529 பெண் காவலா்கள் பங்கேற்றனா். மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் மதுரை மாநகா், புக... மேலும் பார்க்க

தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரையில் கீழே தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை தெற்கு வெளி வீதி முத்துகருப்பப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (74). இவா் காமராஜா் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அ... மேலும் பார்க்க

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை முத்துபட்டி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்குமாா் (35). இவா் வீட்டின் அருகே மரங்களை நட்டு பராமரித்து வந்தாா். இந்த நிலையில... மேலும் பார்க்க