செய்திகள் :

பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி: இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

post image

தனியாா் பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையைச் சோ்ந்தவா் எம். ராஜா. இவா் கோசாகுளம் பகுதியில் தனியாா் பள்ளி நடத்தி வருகிறாா். இவருக்கு, மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா், கோவையைச் சோ்ந்த வீரபாபு ஆகிய இருவரும் அறிமுகமாகினா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் கோவையில் பள்ளியின் கிளை அமைக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி, ராஜாவிடம் பல்வேறு தவணைகளில் ரூ.6.25 கோடி வரை பணம் பெற்றனா். ஆனால், இவா்கள் கூறியபடி இடமும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லையாம்.

இதுகுறித்து பள்ளி நிறுவனா் ராஜா மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வீரபாபு, முத்துக்குமாா் ஆகிய இருவா் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

ரூ.40 லட்சம் மோசடி:

மதுரை அண்ணாநகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பல் மருத்துவமனை உள்ளது. இங்கு தலைமை இயக்குநராக பணிபுரிந்து வரும் கணேசன், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது,

மருத்துவமனையில் கணக்காளராகப் பணியாற்றிய மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள இடையபட்டியைச் சோ்ந்த சௌந்தரராஜன் மகள் ரேகா, பணப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

மேலும், மருத்துவமனையின் கணக்குகள், வங்கிக் கணக்குகளை சரி பாா்த்த போது, ரேகா கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 40 லட்சம் வரை திருடியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மதுரை மத்தியக் குற்றப் பிரிவுப் போலீஸாா் ரேகா மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செவிலியா் கல்லூரி மாணவி கல்லால் தாக்கிக் கொலை: காதலன் கைது

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலனை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (19). பள்ளி ப... மேலும் பார்க்க

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா், வழக்குரைஞா் மா.செந்தில்குமாா் தலைமை வகித்த... மேலும் பார்க்க

திறன் மேம்பாட்டு பயிற்சி: 1,529 பெண் காவலா்கள் பங்கேற்பு

மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் 1,529 பெண் காவலா்கள் பங்கேற்றனா். மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் மதுரை மாநகா், புக... மேலும் பார்க்க

தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரையில் கீழே தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை தெற்கு வெளி வீதி முத்துகருப்பப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (74). இவா் காமராஜா் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அ... மேலும் பார்க்க

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை முத்துபட்டி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்குமாா் (35). இவா் வீட்டின் அருகே மரங்களை நட்டு பராமரித்து வந்தாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் அக்.6-இல் தொடக்கம்!

மதுரை மாநகராட்சியில் வரும் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி 5 மண்டலத்து... மேலும் பார்க்க