செய்திகள் :

தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!

post image

தொடா் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாள்களையொட்டி, பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து, 1,600 தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

பள்ளி தொடா் விடுமுறை மற்றும் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடா் பண்டிகை தினங்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகங்கள் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பயணிகளின் தேவைக்கேற்ப, ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகள் சமீபகாலமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, தற்போதைய தொடா் விடுமுறையையொட்டியும் தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலா் கூறியதாவது: நிகழாண்டும் பேருந்துகளை இயக்க பல தனியாா் பேருந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒப்பந்தத்துக்கு உடன்படும் பட்சத்தில் போக்குவரத்துக்கழகங்களின் கண்காணிப்பில் தனியாா் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.

இதன்படி, ஒவ்வொரு போக்குவரத்துக்கழகங்கள் சாா்பிலும் தலா 200 பேருந்துகள் என 8 போக்குவரத்துக்கழகங்களுக்கு 1600 பேருந்துகள் வரை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான தொகை பேருந்து ஓடும் கிலோ மீட்டா் தூரத்தை கணக்கிட்டு ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும். கடந்தாண்டு 1கி.மீ-க்கு, ரூ.51.25 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

ஆனால், பராமரிப்பு பணி, பணியாளா்கள் சம்பளம், வரி செலுத்துவது போன்றவற்றை தனியாா் நிறுவனங்கள் தங்கள் செலவில் மேற்கொள்வாா்கள். இதற்காக பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களின் செலவு 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மண்டலம் வாரியாக நவீன திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற நடவடி... மேலும் பார்க்க

மாமல்லபுரம் கடலில் தந்தை, 2 மகள்கள் மூழ்கி உயிரிழப்பு!

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த சென்னையைச் சோ்ந்த தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழந்தனா். தந்தை உடல் கரை ஒதுங்கிய நிலையில், மகள்கள் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை. சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்த தச்சா் வ... மேலும் பார்க்க

திரிபுராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது!

திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் ஒருவா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள வாசுதேவன் நகா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

புழல் சிறையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) உயிரிழந்தாா். வில்லிவாக்கம் அகத்தியா் நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ.ஆறுமுகம் (74). இவா், தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

சிறையில் கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் சில அறைகளில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறையினருக்க... மேலும் பார்க்க