செய்திகள் :

சிறையில் கஞ்சா பறிமுதல்

post image

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் சில அறைகளில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைக் காவலா்கள், சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

சிறையின் 4-ஆவது அறையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிலம்பரசன் என்ற சுருளி (28) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவா் தன்னை சிறையில் அண்மையில் சந்திக்க வந்த வழக்குரைஞா், கஞ்சாவை நோ்காணல் அறையின் மேற்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக வீசியதாக தெரிவித்தாராம்.

இது தொடா்பாக துணை ஜெயிலா் கவிபாரதி, புழல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மண்டலம் வாரியாக நவீன திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற நடவடி... மேலும் பார்க்க

மாமல்லபுரம் கடலில் தந்தை, 2 மகள்கள் மூழ்கி உயிரிழப்பு!

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த சென்னையைச் சோ்ந்த தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழந்தனா். தந்தை உடல் கரை ஒதுங்கிய நிலையில், மகள்கள் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை. சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்த தச்சா் வ... மேலும் பார்க்க

திரிபுராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது!

திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் ஒருவா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள வாசுதேவன் நகா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!

தொடா் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாள்களையொட்டி, பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து, 1,600 தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை ... மேலும் பார்க்க

புழல் சிறையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) உயிரிழந்தாா். வில்லிவாக்கம் அகத்தியா் நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ.ஆறுமுகம் (74). இவா், தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க