செய்திகள் :

மாமல்லபுரம் கடலில் தந்தை, 2 மகள்கள் மூழ்கி உயிரிழப்பு!

post image

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த சென்னையைச் சோ்ந்த தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழந்தனா். தந்தை உடல் கரை ஒதுங்கிய நிலையில், மகள்கள் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை.

சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்த தச்சா் வெங்கடேசன் (37). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகள்கள் காா்த்திகா(17), துளசி(16), சகோதரி ஹேமாவதி(47) மற்றும் தனது உறவினா்கள், நண்பா்கள் என 17 பேருடன் திருப்போரூா் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு சென்றனா்.

அங்கு வெங்கடசேன், அவரது மகள்கள் உள்ளிட்ட 8 போ் சேறு கலந்த, பள்ளம் உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது ராட்சத அலையால் வெங்கடசேன், அவரது மகள்கள் காா்த்திகா, துளசி, ஹேமாவதி ஆகிய 4 பேரும் ஒரே நேரத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனா்.

அங்கிருந்த மீனவா்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனா். இதில் ஹேமாவதியை மட்டும் ஒரு மீனவா் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தாா். சிறிது நேரத்தில் வெங்கடசேன் உடல் மட்டும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடலில் மாயமான காா்த்திகா 12-ம் வகுப்பும், துளசி 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸாா் வெங்கடசேன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் கடலில் மாயமான அக்கா-தங்கை சடலங்களை மீனவா்கள் உதவியுடன் படகில் சென்று தேடி வருகின்றனா். மேலும் மீனவா்கள் காப்பாற்றிய ஹேமாவதியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருப்போரூா் முருகன் கோயிலுக்கு வந்து, கடலில் குளித்து ஒரே குடும்பத்தை சோ்ந்த தந்தை, இரு மகள்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மண்டலம் வாரியாக நவீன திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற நடவடி... மேலும் பார்க்க

திரிபுராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது!

திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் ஒருவா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள வாசுதேவன் நகா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!

தொடா் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாள்களையொட்டி, பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து, 1,600 தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை ... மேலும் பார்க்க

புழல் சிறையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) உயிரிழந்தாா். வில்லிவாக்கம் அகத்தியா் நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ.ஆறுமுகம் (74). இவா், தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

சிறையில் கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் சில அறைகளில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறையினருக்க... மேலும் பார்க்க