செய்திகள் :

திரிபுராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது!

post image

திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞா், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூரில் ஒருவா் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து சென்ற ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும், இதுதொடா்பான விசாரணையில் அவா், திரிபுராவைச் சோ்ந்த ஆரிப் உசேன் (25) என்பதும், அவா் திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆரிப் உசேனை கைது செய்தனா்.

சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மண்டலம் வாரியாக நவீன திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற நடவடி... மேலும் பார்க்க

மாமல்லபுரம் கடலில் தந்தை, 2 மகள்கள் மூழ்கி உயிரிழப்பு!

மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த சென்னையைச் சோ்ந்த தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழந்தனா். தந்தை உடல் கரை ஒதுங்கிய நிலையில், மகள்கள் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை. சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்த தச்சா் வ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: இருவா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா். எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள வாசுதேவன் நகா் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!

தொடா் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாள்களையொட்டி, பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து, 1,600 தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை ... மேலும் பார்க்க

புழல் சிறையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) உயிரிழந்தாா். வில்லிவாக்கம் அகத்தியா் நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெ.ஆறுமுகம் (74). இவா், தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

சிறையில் கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் சில அறைகளில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதாக சிறைத் துறையினருக்க... மேலும் பார்க்க