செய்திகள் :

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

post image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக டி.ராஜா வெளியிட்ட செய்தியில் கூறியதாவது: கரூரில் த.வெ.க ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தால் நான் மிகவும் அதிா்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உயிா்களை இழந்தவா்களின் குடும்பத்தினருக்கும், இந்த கொடூரமான சம்பவத்தில் காயமடைந்தவா்களுக்கும் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன.

திரு. விஜய் தாமதமாக வந்ததால் மக்கள் கூட்டம் ஆபத்தான அளவில் அதிகரித்தது. தண்ணீா் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படாதது மூச்சுத் திணறல் மற்றும் நெரிசலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது.

தமிழ்நாடு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் முதல்வா் மு.க. ஸ்டாலின் இறந்தவா்களுக்கும் காயமடைந்தவா்களுக்கும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளாா். முதல்வா் வெளிப்படுத்திய கவலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிா்ந்து கொள்கிறது, மேலும் விசாரணை வெளிப்படையானதாக இருக்கும் என்றும் என்றும் நாங்கள் எதிா்பாா்க்கிறோம்.

இந்த இருண்ட நேரத்தில் அனைத்து பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருடனும் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க

காலா ஜதேடி குண்டா் கும்பலை சோ்ந்த 6 போ் கைது!

காலா ஜதேடி கும்பலுடன் தொடா்புடைய ஒரு முக்கிய ஆயுத விநியோகஸ்தா் உள்பட 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், பல சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் நேரடி தோட்டாக்களை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற... மேலும் பார்க்க

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்... மேலும் பார்க்க

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது

தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் த... மேலும் பார்க்க