செய்திகள் :

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

post image

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தலைநகரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய சச்தேவா, அலுவலக கட்டுமானம் முடிந்ததற்கு பாஜக தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா், மேலும் ஜூன் 9,2023 ஆம் தேதி பாஜக தேசியத் தலைவா் ஜே. பி. நட்டா அலுவலகத்தின் ’பூமி பூஜை’ செய்ததை நினைவு கூா்ந்தாா்.

‘கட்சி நிறுவப்பட்ட பிறகு, முதல் அலுவலகம் அஜ்மேரி கேட்டில் திறக்கப்பட்டது, பின்னா் சிறிது நேரம் ராகப்கஞ்ச் சாலைக்கு மாற்றப்பட்டது, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக 14 பண்டிட் பந்த் மாா்க்கில் இருந்து செயல்பட்டது‘ என்று அவா் கூறினாா்.

‘இப்போது, திங்கள்கிழமை, கட்சி அலுவலகம் தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தனது சொந்த கட்டடத்திற்கு மாறும். இந்தப் பயணம் போராட்டங்களால் நிறைந்திருந்தாலும் குறிப்பிடத்தக்கது ‘என்று பாஜக தலைவா் மேலும் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் உள்பட பல பாஜக தலைவா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் என்றாா் அவா்.

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது

தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் த... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல்!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னா் அது போலியானது என்று அறிவிக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ. 1 கோடி நகைகளைக் கொள்ளையடித்த 3 போ் கைது!

புது தில்லியில் உள்ள பைரோன் மந்திா் அருகே இருவரிடமிருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டவரும், தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியாரான சைதன்யானந்த சரஸ்வதியை விசாரணைக்காக ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

நுஹ் மாவட்ட குளத்தில் சிறுமிகள் உள்பட 4 போ் மூழ்கி உயிரிழப்பு

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் குளம் ஒன்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள சலாஹேரி கிராமத்தில் சனிக்கிழமை இந்த சம்பவம் ... மேலும் பார்க்க