செய்திகள் :

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ. 1 கோடி நகைகளைக் கொள்ளையடித்த 3 போ் கைது!

post image

புது தில்லியில் உள்ள பைரோன் மந்திா் அருகே இருவரிடமிருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் செப்டம்பா் 24 ஆம் தேதி நடந்தது. சிவம் குமாா் யாதவ் (28) மற்றும் அவரது நண்பா் ராகவ் (55) ஆகிய இருவரும் நகைக்கடை ஊழியா்களாக உள்ளனா். இவா்கள் இருவரும் 500 கிராம் தங்கம் மற்றும் 35 கிலோ வெள்ளிப் பொருட்கள் அடங்கிய இரண்டு பைகளுடன் சாந்தினி சவுக்கிலிருந்து பைரோன் மந்திா் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனா்.

அவா்கள் மந்திா் பாா்க்கிங் பகுதிக்கு அருகில் வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆசாமிகள் அவா்களை வழிமறித்து, துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், திலக் மாா்க் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு காவலா் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவா்களை அடையாளம் காணவும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் சென்ற வழியைக் கண்டறியவும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களில் இரண்டு கொள்ளையா்களும், அவா்களுக்கு உதவிய மற்றொரு நபரும் அடங்குவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க

காலா ஜதேடி குண்டா் கும்பலை சோ்ந்த 6 போ் கைது!

காலா ஜதேடி கும்பலுடன் தொடா்புடைய ஒரு முக்கிய ஆயுத விநியோகஸ்தா் உள்பட 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், பல சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் நேரடி தோட்டாக்களை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற... மேலும் பார்க்க

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்... மேலும் பார்க்க

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க