செய்திகள் :

கரூர் பலி 41-ஆக உயர்வு!

post image

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகியுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் சிகிச்சை பலினின்றி இன்று(செப். 29) உயிரிழந்தார்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 51 பேர் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். அவா்களில் ஒருவரின் நிலைமை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவா்கள் நலமாக இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

The death toll in the stampede at the Karur Thaweka campaign rally has risen to 41.

கரூர் பலி: புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு! புதிய உச்சத்தில் வெள்ளி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது. அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.இதனால், தமிழகத்த... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை கோரும் தவெக!

கரூா் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, தவெக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசும... மேலும் பார்க்க

நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: மயில்சாமி அண்ணாதுரை

தமிழக இளைஞா்கள் நீா் சேமிப்பு, இயற்கை வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினாா். சென்னையில் ஆழ்வாா்பேட்டையில் உள்ள நாரத கான சபாவி... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்!

தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் க... மேலும் பார்க்க