செய்திகள் :

கரூர் பலி: புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

post image

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இன்று(செப். 29) காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தவெக தலைவர் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக கரூரில் இன்று(செப். 29) விசாரணை நடத்தி வருகிறது.

கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, பலியானவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: தடம்புரண்ட திரைக்கதை!

ADSP Premanandan has been appointed as the new investigating officer in the incident in which 41 people died in a stampede at a Karur Thaweka campaign rally.

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்... மேலும் பார்க்க

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பார்வையிடவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் வருகை தந்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்... மேலும் பார்க்க

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட ந... மேலும் பார்க்க

தொடர் மழை எதிரொலி! உச்சம் தொடும் ஏரிகளின் நீர்மட்டம்!

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.திங்கள்கிழமை காலை நிலவரப... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய்யுடன் ராகுல் காந்தி பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியுள்ளார்.ராகுல் காந்தி கரூர் கூட்ட நெர... மேலும் பார்க்க

கரூர் பலி: செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! மக்கள் மீது தடியடி!! தவெக மனு

சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 40 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் மனு த... மேலும் பார்க்க