செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்

post image

கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். பலர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

தற்போது இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட சுகுணா (65) என்கிற பெண்மணி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

நேற்று காலை நிலவரப்படி, இந்தக் கூட்ட நெரிசலால் 39 பேர் உயிரிழந்திருந்தனர்.

நேற்று மதியம் கவின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது ஒருவர் என இந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தச் சம்பவத்தால், 14 ஆண்கள், 18 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் . இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு, தவெக, காங்கிரஸ் சார்பில் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெருக்கடிகள் காரணமா?

இஸ்ரேல் காசா மீது நடத்தும் கோரத் தாக்குதல்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா என ஒவ்வொரு நாடுகளாக பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரி... மேலும் பார்க்க

`வர்த்தகம் இந்தியாவின் முடிவு' - ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை' - மெச்சும் ரஷ்யா!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி... மேலும் பார்க்க

TVK: `தி நியூயார்க் டைம்ஸ் முதல் தி கொரியா டைம்ஸ் வரை' - உலக நாடுகளின் பார்வையில் கரூர் சோகம்

தவெக தலைவர் விஜய் நேற்று கரூருக்குப் பரப்புரைக்காகச் சென்றிருந்தார். மதியம் 12 மணிக்கு பரப்புரை இடத்துக்கு வருவதற்குப் பதில் மாலை 7 மணிக்குப் பிறகே சென்றிருக்கிறார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில... மேலும் பார்க்க