செய்திகள் :

`வர்த்தகம் இந்தியாவின் முடிவு' - ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை' - மெச்சும் ரஷ்யா!

post image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

இதன் மூலம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிடும் என்று கணக்கு போட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தியாவின் நிலைப்பாடு

ஆனால், அது நடக்கவில்லை. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் அளவுதான் குறைந்துள்ளது.

'இந்திய தேசத்திற்கும், இந்திய மக்களின் நலனுக்கும் எது நல்லதோ, அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்யும்' என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் பேச்சு

சமீபத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அமெரிக்கா தங்களது எண்ணெயை இந்தியாவிடம் விற்க நினைக்கிறது. இது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து என்ன வாங்குகிறோம் என்பது இந்தியாவின் முடிவு. அதற்கும் இந்தியா - அமெரிக்க உறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்யாவின் பாராட்டு

ஜெய்சங்கரின் இந்தப் பேச்சை ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஐ.நா சபையில் பாராட்டியிருக்கிறார்.

அவர் பேசியதாவது...

"ஜெய்சங்கரின் இந்தப் பேச்சு தக்க பதிலடி. இது துருக்கியைப் போல, இந்தியாவிற்கு சுய மரியாதை இருக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்திய - ரஷ்ய உறவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த உறவிற்கு ஏதாவது பிரச்னையை ஏற்படுத்த பிறர் முயன்றால், 'இந்தியா தனது கூட்டாளியைத் தானே தேர்ந்தெடுக்கும்' என்பதை இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டனர்.

Sergei Lavrov | செர்ஜி லாவ்ரோவ்
செர்ஜி லாவ்ரோவ்

அமெரிக்கா இந்தியா - அமெரிக்க உறவை வலுப்படுத்த விரும்பினால், அமெரிக்கா முன்னிறுத்தும் விதிமுறைகளை இந்தியா ஆலோசிக்க தயாராக இருக்கிறது.

ஆனால், வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவிற்கும், பிற நாடுகளுக்கும் ஒப்பந்தம் உண்டானால், இந்தியா அந்தந்த நாடுகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று கூறியிருக்கிறார்.

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம்

கரூரில் நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடந்தது. அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்தனர். பலர் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41 ஆக உயர... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர்:`விரைவில் போர் நிறுத்தம்?' - நெதன்யாகு; ட்ரம்ப் அதிருப்தி, நெருக்கடிகள் காரணமா?

இஸ்ரேல் காசா மீது நடத்தும் கோரத் தாக்குதல்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா என ஒவ்வொரு நாடுகளாக பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரி... மேலும் பார்க்க

TVK: `தி நியூயார்க் டைம்ஸ் முதல் தி கொரியா டைம்ஸ் வரை' - உலக நாடுகளின் பார்வையில் கரூர் சோகம்

தவெக தலைவர் விஜய் நேற்று கரூருக்குப் பரப்புரைக்காகச் சென்றிருந்தார். மதியம் 12 மணிக்கு பரப்புரை இடத்துக்கு வருவதற்குப் பதில் மாலை 7 மணிக்குப் பிறகே சென்றிருக்கிறார். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில... மேலும் பார்க்க

கரூர்: ``என் அம்மாவின் மரணத்தை நினைவுபடுத்தியது; தர்மத்தின் வாழ்வுதனை'' - ஆதவ் அர்ஜுனா எமோஷனல்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயி... மேலும் பார்க்க