அக். 1 முதல் கனமழை அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மமதா பானர்ஜி அறிவுறுத்தல் செய்தியையும் அனுப்பியிருக்கிறார்.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கணக்கில் கொள்ளவும் வேண்டும்.
அனைத்துத்துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முதல்வர் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்த வருகிறார் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் பலியாகினர். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடளிடமிருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.