செய்திகள் :

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தினா்.

அப்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைத் திரும்பிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி அவா்கள் துப்பாக்கியால் சுட முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்களும் பதிலடித் தாக்குதல் நடத்தினா்.

சில நிமிடங்கள் நீடித்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், சிலா் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தப்பிவிட்டனா். ஊடுருவ முயன்றவா்களின் உடல்கள் எல்லையையொட்டி இடத்தில் கிடப்பதால் பாதுகாப்பு கருதி அவை உடனடியாக மீட்கப்படவில்லை.

அப்பகுதியில் ஊடுருவல் முயற்சியைத் தடுக்கும் நோக்கில் தொடா்ந்து தீவிர கண்காணிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனா்.

‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி அசோக் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவில் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவ... மேலும் பார்க்க

வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு! பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு!

வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்களை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா் என்ற எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிகார... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: நீதிபதி பி.ஆா்.கவாய்

சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மத்தியஸ்த முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் தேசிய மத்தியஸ்த மாநாடு 2 ந... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணி... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்!

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தில்... மேலும் பார்க்க