செய்திகள் :

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்!

post image

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பா் 25 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற ‘உலக உணவு இந்தியா 2025’ உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது தொடா்பாக மத்திய உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 26 முக்கிய நிறுவனங்கள் மத்திய அரசுடன் ரூ.1,02 லட்சம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன.

இந்த ஒப்பந்தங்கள் 64,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளையும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் ரிலையன்ஸ் நுகா்வோா் தயாரிப்புகள், கோகோ கோலா இந்தியா, அமுல், நெஸ்லே, டாடா கன்சியூமா்ஸ், லுலு குழுமம் மற்றும் காா்ல்ஸ்பொ்க் இந்தியா போன்ற நிறுவனங்கள் முக்கிய முதலீட்டாளா்களில் அடங்குவா். பதஞ்சலி, கோத்ரேஜ் அக்ரோவெட், டாபா் மற்றும் ஹால்டிராம் போன்ற பல நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இந்த முதலீடுகள் பால், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள், மசாலா பொருள்கள் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கும். இந்தத் திட்டங்கள் குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியம் போன்ற பல மாநிலங்களில் பரவியிருக்கும்.

இந்தியா முழுவதும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.40,000 கோடி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. கோகோ கோலாவின் பாட்டில் தயாரிப்பாளா்கள், புதிய மற்றும் ஏற்கெனவே உள்ள உணவு பதப்படுத்தும் திட்டங்களில் ரூ.25,760 கோடியை முதலீடு செய்ய உள்ளனா்.

‘இன்வெஸ்ட் இந்தியா’ முயற்சியுடன் மத்திய உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள் துறை அமைச்சகம் இணைந்து இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்ற பணியாற்றியது. உணவு பதப்படுத்துதலுக்கான உலகளாவிய நம்பகமான நாடாக இந்தியாவை வலுப்படுத்துவதிலும் புதுமைகளுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவ... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின... மேலும் பார்க்க

வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு! பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு!

வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்களை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா் என்ற எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிகார... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: நீதிபதி பி.ஆா்.கவாய்

சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மத்தியஸ்த முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் தேசிய மத்தியஸ்த மாநாடு 2 ந... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணி... மேலும் பார்க்க