செய்திகள் :

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

post image

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத் தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்து வந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்குமாறும் சொல்கிறார். இது உண்மையா?

பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

வெறும் தரையில் படுத்துத் தூங்கினால் ரத்தம் சுண்டிப்போகுமா என்ற கேள்விக்கு நேரடியான பதில் 'இல்லை' என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்லப்படுவதன் பின்னால் பல விஷயங்கள் உள்ளன.

தரையில் படுப்பது நல்லதா, கெட்டதா என்பது அவரவர் வயது, உடல்நிலை, எப்படிப் படுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொறுத்து மாறுபடும்.

பொதுவாக, வெறும் தரையில் படுக்கும்போது, தரையின் குளிச்சியின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். கடினமான தரைப்பகுதி என்றால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு நரம்பு அழுத்தம் ஏற்படலாம்.

இதுவும் கால்களை மரத்துப்போக வைக்கும். தரை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்போது, நம் உடலில் உள்ள சூடு, தரையோடு கனெக்ட் ஆகும். அப்போதும் மரத்துப்போவது சீக்கிரமே நடக்கும்.

இந்தக் காரணங்களுக்காக, நீரிழிவு உள்ளோரை வெறும் தரையில் படுக்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.

முதுகுவலி உள்ளவர்கள், ஏற்கெனவே சயாட்டிகா போன்ற பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் குஷன் இல்லாமல் படுக்கும்போது  அவர்களது வலி அதிகரிக்கக்கூடும்.

வெறும் தரையில் படுக்கும்போது கவனிக்க வேண்டியவை
வெறும் தரையில் படுக்கும்போது கவனிக்க வேண்டியவை

மரத்துப்போவது என்ற பிரச்னையை ரத்த ஓட்டம் குறைதல் என் கணக்கில் புரிந்துகொள்வதால்தான், வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகும் என்று சொல்கிறார்கள்.

உண்மையில், ரத்தம் சுண்டிப்போவதில்லை. ஆனால், மரத்துப்போவது நிச்சயம் நடக்கும். எனவே, எப்போதும் மெலிதான படுக்கை அல்லது கனமான போர்வையை விரித்து அதன் மேல் படுத்தால் மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

முதுகுவலி உள்ள சிலருக்கு தரையில் படுக்கும்படி அறிவுறுத்துவோம். அப்போதும் வெறும் தரையில் படுக்காமல், இப்படி ஏதேனும் விரிப்பின் மேல்தான் படுக்கச் சொல்வோம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சுவலி, இசிஜி நார்மல்; அதைத்தாண்டி இன்னொரு டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan:நான் 50 வயது பெண். எனக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவரை சந்தித்தேன். இசிஜி பரிசோதனையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும், ட்ரோபோனின் என்ற பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?

Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல... மேலும் பார்க்க

எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?

’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான். அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் ... மேலும் பார்க்க

``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!

''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது. நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெயிட்லாஸ் செய்தால், மார்பகங்கள் தளர்ந்து போகுமா?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே மார்பகங்கள் பருத்துக் காணப்படும். உடல் பருமன் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். எடையைக் குறைத்தால் மார்பகங்கள் தளர்ந்துபோகும் என்பது உண்மையா? அதனால் எ... மேலும் பார்க்க