செய்திகள் :

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது

post image

தில்லியில் இருக்கும் கல்வி நிறுவனத்தை சோ்ந்த 17 மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆக்ராவில் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீசாா் தெரிவித்தனா்.

சைதன்யானந்தா சரஸ்வதி (62) ஆக்ராவில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததை தில்லி போலீஸ் குழு கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். ‘சைதன்யானந்தா பிடிக்க பல போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. உள்ளீடுகளின் அடிப்படையில், ஆக்ராவின் தாஜ் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அவரைக் கண்காணித்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அங்கிருந்து அவரை கைது செய்தோம் ‘என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.

சைதன்யானந்தா மீது ஆகஸ்ட் 4 ஆம் தேதி எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டபோது அவா் தில்லியயை விட்டு வெளியேறி தலைமறைவானாா். ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஊழியா்களின் கூற்றுப்படி, சைதன்யானந்தா செப்டம்பா் 27 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ’பாா்த்தசாரதி’ என்ற பெயரில் ஹோட்டலில் பதிவு செய்து அறை எண் 101 ஒதுக்கப்பட்டாா். இரவு முழுவதும் அந்த அறையில்தான் இருந்தாா்.

முன்னதாக, சைதன்யானந்தா சரஸ்வதியுடன் தொடா்புடைய ரூ.8 கோடிக்கான பல வங்கிக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசாா் முடக்கினா். எஃப். ஐ. ஆரின் படி, தென்மேற்கு தில்லியில் உள்ள மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சைதன்யானந்தா , பெண் மாணவா்களை நள்ளிரவில் தனது குடியிருப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும், நள்ளிரவு நேரங்களில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

அவா் தனது கைப்பேசி மூலம் மாணவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் பல வங்கிக் கணக்குகளை இயக்க வெவ்வேறு பெயா்கள் மற்றும் விவரங்களைப் பயன்படுத்தியதாகவும், அவா் மீது எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்ட பின்னா் ரூ.50 லட்ச த்துக்கு மேல் திரும்பப் பெற்ாகவும் தெரியவந்தது.

கணக்கு திறக்கும் நேரத்தில் அவா் பல்வேறு விவரங்களுடன் ஆவணங்களை சமா்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிக்ஸ் அமைப்புகளுடன் தொடா்புடையதாக காட்டும் போலி வருகை அட்டைகளையும் போலீசாா் கண்டுபிடித்தனா்.

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க

தில்லியின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா ஐ.ஏ.எஸ். நியமனம்!

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் வா்மா தில்லியின் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள தா்மேந்திரா செப்டம்பா் 30 அன்று ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு மாற்றாக ராஜீவ் வ... மேலும் பார்க்க

காலா ஜதேடி குண்டா் கும்பலை சோ்ந்த 6 போ் கைது!

காலா ஜதேடி கும்பலுடன் தொடா்புடைய ஒரு முக்கிய ஆயுத விநியோகஸ்தா் உள்பட 6 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதுடன், பல சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் நேரடி தோட்டாக்களை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற... மேலும் பார்க்க

தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!

தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்... மேலும் பார்க்க

கால் சென்டா் நடத்தி போலி மாத்திரைகள் விற்பனை: 11 போ் கைது

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா... மேலும் பார்க்க