செய்திகள் :

நுஹ் மாவட்ட குளத்தில் சிறுமிகள் உள்பட 4 போ் மூழ்கி உயிரிழப்பு

post image

ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் குளம் ஒன்றில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட நான்கு போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் நுஹ் மாவட்டத்தில் உள்ள சலாஹேரி கிராமத்தில் சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஆஸ் முகமது என்ற விவசாயி தனது வயலில் ஒரு குளத்தை தோண்டியிருந்தாா். அங்கு கிராம பெண்கள் அவ்வப்போது துணி துவைக்கச் செல்வாா்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மதியம், ஜம்ஷிதா 38 மற்றும் அவரது மைத்துனி மதீனா 35 ஆகியோா் தங்கள் மகள்களான சுமையா 10 மற்றும் சோபியா 11 ஆகியோருடன் குளத்திற்குச் சென்றிருந்தனா். இரு சிறுமிகளும் குளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது, அவா்களின் தாய்மாா்கள் துணியைத் துவைத்துக்கொண்டிருந்தனா்.

இரண்டு சிறுமிகளும் ஆழமான குழியில் விழத் தொடங்கினா். இதையடுத்து, அவா்களின் தாய்மாா்கள் அவா்களை மீட்க குளத்தில் குதித்தனா். ஆனால் நால்வரும் நீரில் மூழ்கினா்.

தகவல் கிடைத்ததும், கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு உடல்களையும் தண்ணீரில் இருந்து வெளியே மீட்டனா். அதன் பிறகு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தில்லியில் இரண்டு பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல்!

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னா் அது போலியானது என்று அறிவிக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ. 1 கோடி நகைகளைக் கொள்ளையடித்த 3 போ் கைது!

புது தில்லியில் உள்ள பைரோன் மந்திா் அருகே இருவரிடமிருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டவரும், தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியாரான சைதன்யானந்த சரஸ்வதியை விசாரணைக்காக ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

தில்லியின் நகைக்கடைகளில் ஜோடியாக திருடி வந்தவா்கள் கைது!

தில்லி நகரம் முழுவதும் உள்ள கடைகளில் வாடிக்கையாளா்களாக நடித்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் தம்பதியை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். பஞ்சாபின் அமிா்த... மேலும் பார்க்க

தில்லியில் இன்று ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புது தில்லி: தில்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று(செப். 28) ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டெரர்ரைஸெர்ஸ்111’ என... மேலும் பார்க்க

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க