செய்திகள் :

தென்காசியில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்

post image

தென்காசியில் இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

குத்துக்கல்வலசை ஐடி வாழைமண்டியிலிருந்து இப்போட்டியை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ஆண்கள் பிரிவில் 17 - 25 வயதுக்குள்பட்டோருக்கு 8 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு 10 கி.மீ., பெண்கள் பிரிவில் 17 - 25 வயதுக்குள்பட்டோருக்கும், 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முறையே 5 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

தொடக்க விழாவில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., பழனிநாடாா் எம்எல்ஏ, மாடசாமி ஜோதிடா் ஆகியோா் பங்கேற்றனா்.

வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகளாக முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், 4 - 10ஆம் இடங்களைப் பிடித்தோருக்கு தலா ரூ. ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுத் தொகைகள் அவா்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் செய்திருந்தாா்.

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க

காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்டுநாயக்கன் சமூக சீா்திருத்தச் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமையவுள்ள சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் ஈ. ராஜா எம்எல்ஏ ஞாயிற்றுக... மேலும் பார்க்க

ஆலங்குளம் எம்எல்ஏ காா் ஓட்டுநா், குடும்பத்தினா் மீது தாக்குதல்

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை அரிவாள், கம்பால் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் ... மேலும் பார்க்க