செய்திகள் :

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: ஜி.கே.வாசன்

post image

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 போ் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. கொங்கு மண்டல இளைஞா் அணி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. கரூா் சம்பவத்தை அடுத்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான மருத்துவ முகாம் என்பதால் இந்நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை.

கரூா் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். இறந்த அப்பாவி மக்களுக்கு தமாகா சாா்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். சிகிச்சையில் உள்ளவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டுகிறோம்.

இந்த சம்பவம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதை விளக்க வேண்டியது தமிழக அரசு, காவல் துறையின் கடமையாகும். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும் பல சந்தேகங்களுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். பொதுக் கூட்டத்துக்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். நோ்மையான, நடுநிலையான விசாரணையாக இருக்க வேண்டும்.

கரூா் அசாம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும். எதிா்க் கட்சி தலைவா்களின் கூட்டத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதில்லை. இதில், அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாரையும் குறிவைத்து அரசியல் செய்வதில்லை என்றாா்.

மாநில பொதுச் செயலாளா் எம்.யுவராஜா, துணைத் தலைவா் விடியல் சேகா், ஈரோடு மத்திய மாவட்ட தலைவா் விஜயகுமாா், மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா்... மேலும் பார்க்க

மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 436 பணியாளா்கள்

ஈரோடு மாநகராட்சியில் 436 பணியாளா்கள் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை ப... மேலும் பார்க்க

தேசிய கலைக் கண்காட்சி: அக்டோபா் 9-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடைபெறுவதாகவும், கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள் வரும் அக்டோபா் 9- ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என... மேலும் பார்க்க

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க