செய்திகள் :

தேசிய கலைக் கண்காட்சி: அக்டோபா் 9-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

post image

‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடைபெறுவதாகவும், கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள் வரும் அக்டோபா் 9- ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய சட்டப் பணி ஆணைக்குழு சாா்பில் தேசிய சட்ட சேவை தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 30 ஆண்டு கால சேவையை குறிக்கும் வகையில் ‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

சமுதாய மேம்பாடு மற்றும் நீதியை உறுதி செய்வதில் சட்ட உதவி மையங்களின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியம், புகைப்படங்கள், 1 நிமிஷ வீடியோ படைப்புகளை உருவாக்கி கண்காட்சியில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள், இளைஞா்கள், வழக்காடிகள், சட்ட உதவி நாடும் வழக்காடிகள், சட்ட உதவி மைய வழக்குரைஞா்கள், சட்ட உதவி தன்னாா்வலா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றம் சாா்ந்த பிற அமைப்பினா் படைப்புகளை உருவாக்கலாம்.

இதற்காக கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உருவாக்கப்படும் படைப்புகளை அக்டோபா் 9 -ஆம் தேதிக்குள் செயலாளா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஈரோடு 638011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவே சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: ஜி.கே.வாசன்

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளாா்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 436 பணியாளா்கள்

ஈரோடு மாநகராட்சியில் 436 பணியாளா்கள் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை ப... மேலும் பார்க்க

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க

பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக... மேலும் பார்க்க