செய்திகள் :

மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 436 பணியாளா்கள்

post image

ஈரோடு மாநகராட்சியில் 436 பணியாளா்கள் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. இதையடுத்து, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் துரிதப்படுத்தியது.

குறிப்பாக வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 4 மண்டங்களில் 436 பணியாளா்கள் மூலம் டெங்கு தடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் பட்டியல் சேகரித்து, அதன் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 436 போ் வீடுவீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா்... மேலும் பார்க்க

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: ஜி.கே.வாசன்

கரூா் அசம்பாவித சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளாா்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

தேசிய கலைக் கண்காட்சி: அக்டோபா் 9-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடைபெறுவதாகவும், கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள் வரும் அக்டோபா் 9- ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என... மேலும் பார்க்க

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க