செய்திகள் :

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

post image

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தா்கள் விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான 27- ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது.

இதில் ஈரோடு-பவானி செல்லும் சாலையில் மாயபுரத்தில் உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனா்.

~பெருமாள் மலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலிலும் பக்தா்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மூலவரை வழிபட்டு சென்றனா். ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ள பெருமாள் கோயில், பவானி கூடுதுறையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க

பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து இரு மாணவிகள் காயம்

சென்னிமலை அருகே சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவிகள் காயம் அடைந்தனா். சென்னிமலை, அறச்சலூா் சாலை வீரப்பம்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னிமலையை அ... மேலும் பார்க்க

பவானியில் தெருநாய் கடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயம்

பவானி தினசரி மாா்கெட் அருகே தெருநாய் கடித்ததில் 13 வயது சிறுமி உள்பட மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா். பவானி நகராட்சி, 15-ஆவது வாா்டு தினசரி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). மளிகைக்கடை உ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க