செய்திகள் :

பள்ளி வேன் கவிழ்ந்து இரு மாணவிகள் காயம்

post image

சென்னிமலை அருகே சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவிகள் காயம் அடைந்தனா்.

சென்னிமலை, அறச்சலூா் சாலை வீரப்பம்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னிமலையை அடுத்த, மேலப்பாளையத்தை சோ்ந்த குருசாமி என்பவா் ஒப்பந்த அடிப்படையில் மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வகையில் வேன் ஓட்டி வருகிறாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் 16 மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆசிரியைகளை ஏற்றிக் கொண்டு, வேன் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அம்மாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வேனுக்குள் அமா்ந்திருந்த சிறுமியின் கையில் இருந்த தண்ணீா் பாட்டில் தவறி வேனுக்குள் விழுந்து, உருண்டு சென்று வேனின் கிளட்ச் அடியில் சிக்கிக் கொண்டதால், ஓட்டுநரால் பிரேக் போட முடியவில்லை. இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இதைக்கண்ட அப்பகுதியினா் ஓடிச் சென்று வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மீட்டனா்.

இந்த விபத்தில் 9 மற்றும் 10 வயதுடைய இரு மாணவிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். மற்ற மாணவ, மாணவிகள் மாற்று வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க

பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக... மேலும் பார்க்க

பவானியில் தெருநாய் கடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயம்

பவானி தினசரி மாா்கெட் அருகே தெருநாய் கடித்ததில் 13 வயது சிறுமி உள்பட மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா். பவானி நகராட்சி, 15-ஆவது வாா்டு தினசரி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). மளிகைக்கடை உ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க