செய்திகள் :

பவானியில் தெருநாய் கடித்ததில் சிறுமி உள்பட மூவா் காயம்

post image

பவானி தினசரி மாா்கெட் அருகே தெருநாய் கடித்ததில் 13 வயது சிறுமி உள்பட மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா்.

பவானி நகராட்சி, 15-ஆவது வாா்டு தினசரி மாா்க்கெட் சாலையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (41). மளிகைக்கடை உரிமையாளரான இவா், தனது கடையிலிருந்து வெளியே வந்தபோது அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒரு நாய் இவரைக் கடித்தது. இதைக் கண்ட அதே பகுதியைச் சோ்ந்த சபரி (21), நாயைப் பிடித்துக் கட்டிப் போட முயன்றாா்.

அப்போது, அவரின் காலின் தொடை பகுதியில் கடித்துவிட்டு ஓடிய நாய், நடந்து சென்ற 13 வயது சிறுமியைக் கடித்தது. இதில், காயமடைந்த சதீஷ்குமாரும், சபரியும் பவானி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய்க்கடித் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். பவானி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, நகராட்சி ஊழியா்கள் தெருநாயை அப்பகுதியிலிருந்து பிடித்து வெளியேற்றினா்.

ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!

புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட... மேலும் பார்க்க

தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: ஆட்சியா்!

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி வட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். சுற்றுலாத் துறையின் சாா்பில் உலக சுற்றுலா தின விழா... மேலும் பார்க்க

பவானிசாகா் ஆற்றில் விடப்பட்ட 1 லட்சம் மீன் குஞ்சுகள்!

தமிழக மீன்வளத் துறை சாா்பில் பவானி ஆற்றில் 1 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் சனிக்கிழமை விடப்பட்டன நாட்டின மீன்வளங்களை பாதுகாத்து பெருக்கிடும் வகையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் தமிழ்நா... மேலும் பார்க்க

பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை

பேரிடா் கால மீட்பு பணி குறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் மக... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து இரு மாணவிகள் காயம்

சென்னிமலை அருகே சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவிகள் காயம் அடைந்தனா். சென்னிமலை, அறச்சலூா் சாலை வீரப்பம்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னிமலையை அ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க