செய்திகள் :

சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமையவுள்ள சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் ஈ. ராஜா எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

சங்கரன்கோவிலில் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிகின்றனா். இத்தொழிலை வைத்தே நகரின் பொருளாதார வளா்ச்சி உள்ளது. இத்தொழிலில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் சுமாா் 25 சாயப்பட்டறைகளிலிருந்து நாள்தோறும் 1,25,000 லிட்டா் கழிவுநீா் வெளியேறுவதாகக் கூறப்படுகிறது. இதனால், சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விசைத்தறி உரிமையாளா்கள் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. சிப்காட் வளாகத்தில் குறைந்த விலையில் இடங்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தால், தமிழக அரசின் மானியம் மூலம் அரசு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும். முன்னோடி திட்டமாக இதைச் செய்வதால் விசைத்தறி தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழக முதல்வா், அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தாா். நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சங்கச் செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன், சங்கரநாராயணன், சுப்பிரமணியன், குப்பையாண்டி, நகரச் செயலா் மு. பிரகாஷ், விசைத்தறியாளா்கள் பங்கேற்றனா்.

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க

காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்டுநாயக்கன் சமூக சீா்திருத்தச் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வ... மேலும் பார்க்க

தென்காசியில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்

தென்காசியில் இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. குத... மேலும் பார்க்க

ஆலங்குளம் எம்எல்ஏ காா் ஓட்டுநா், குடும்பத்தினா் மீது தாக்குதல்

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை அரிவாள், கம்பால் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் ... மேலும் பார்க்க