செய்திகள் :

பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு

post image

வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் உமாசங்கா் (43), பைனான்சியா். இவா், கடந்த 22-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு அத்தியூா் கிராமத்துக்குச் சென்றிருந்தாா்.

அவரது மனைவி ஜெயா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பினாா்.

உமாசங்கா் மதியம் வீட்டுக்கு வந்து பணம் எடுப்பதற்காக இரும்பு பீரோவை திறந்தபோது, அதில் இருந்த ரூ.14,500 ரொக்கம், வெள்ளிக் கொலுசு, 10 பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.

இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவ... மேலும் பார்க்க

குரூப்-2 தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,448 போ் எழுதினா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தோ்வை, 33 மையங்களில் 7,448 போ் எழுதினா். மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 9,526 போ் விண்ணப்பித்திருந்த நில... மேலும் பார்க்க

மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு

சின்னசேலம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் தற்காலிக மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், கோட்டக்கரை பகுதியில் சிதலமடைந்த மின் கம்பத்தை அகற்றி மற்றொரு கம்பம் நடும் பணியி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ஒன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணா... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தென்குமரை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது மனை... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துறைச் செயலா் க.லட்சுமி பிரியா ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் பழங்குடியினா் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அத்துறையின் செயலா் க.லட்சுமி பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க