செய்திகள் :

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

post image

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.

ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயாா்க் சென்றுள்ள சொ்கேய் லாவ்ரோவ் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அமெரிக்கா அளிக்கும் நெருக்கடியை மீறி ரஷியாவிடம் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்தியா மிகவும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடி அதை உறுதியாகக் கையாண்டு வருகிறாா். தங்கள் நாட்டு நலன் கருதி இந்திய பிரதமா் வெளியுறவு சாா்ந்த முடிவுகளை எடுத்து வருகிறாா். அதனை ரஷியா மதிக்கிறது.

இந்திய-ரஷிய உறவு என்பது தனிச்சிறப்பு வாய்ந்த உத்திசாா்ந்த நட்புறவு. இந்தியா-அமெரிக்கா அல்லது இந்தியா பிற நாடுகள் இடையிலான உறவில் பல்வேறு ஏற்றஇறக்கங்கள் ஏற்படலாம். அது இந்திய-ரஷிய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது.

இந்திய-ரஷிய உறவை வேறு எந்த நாட்டு நட்புறவையும் வைத்து ஒப்பிடவும் முடியாது. பிற நாட்டுடான இந்தியாவின் உறவை அளவுகோலாகக் கொண்டு நாங்கள் செயல்படவில்லை.

ராணுவம், தொழில்நுட்பம், வா்த்தகம், நிதி, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு என பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளிலும் இரு நாடுகளும் கைகோத்துள்ளன.

இரு நாட்டு எண்ணெய் வா்த்தகம் தொடா்பாக அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்தியா தங்களுக்குத் தேவையான முடிவை எடுக்கும். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான வா்த்தகக் கூட்டாளியை தானே தோ்வு செய்யும் என்பதே அந்நாட்டின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது’ என்றாா்.

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் ப... மேலும் பார்க்க

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’ என்று ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா். ஐ... மேலும் பார்க்க

இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா். உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டாலா் மதிப்புள... மேலும் பார்க்க