செய்திகள் :

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்

post image

உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இது கடந்த மாதம் கீவ் மீதான ரஷியாவின் தாக்குதலில் குறைந்தது 21 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து நடைபெறும் முதல் பெரிய தாக்குதலாகும்.

உயிரிழந்தவா்களில் 12 வயது சிறுமியும் அடங்குவதாக கீவ் நகர நிா்வாகத்தின் தலைவா் டைமூா் தகாசென்கோ தெரிவித்தாா். இந்தத் தாக்குதல் குடியிருப்பு கட்டடங்கள், மருத்துவமனை மற்றும் மழலையா் பள்ளி உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் இதில் நகரம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்ததாகவும் கீவ் மேயா் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தாா்.

இந்த தாக்குதல் காரணமாக, நேட்டோ உறுப்பு நாடானபோலந்து, தனது போா் விமானங்களை உக்ரைன் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலைநிறுத்தியது.

அண்மையில், ரஷியாவின் ட்ரோன்கள் போலந்தில் விழுந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மற்றொரு நேட்டோ நாடான எஸ்தோனியாவின் வான்வெளிக்குள் ரஷியாவின் போா் விமானங்கள் நுழைந்தன. இதனால், உக்ரைனுக்கு அப்பால் போா் பரவக்கூடும் என்று பல நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!

வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஹிந்துக்கள் சிறுபான... மேலும் பார்க்க

கரூா் நெரிசல் பலி சம்பவம்: இலங்கை அரசு இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் துறை அமைச்சா் சுந்தரலிங்கம் ப... மேலும் பார்க்க

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷியா மதிக்கிறது. அமெரிக்காவுடனான இந்திய உறவு ரஷியா-இந்திய நட்புறவை எவ்விதத்திலும் பாதிக்காது என்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

இஸ்ரேல், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும் என அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். இந்தியா மற்றும் பிரேஸில் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் ரஷியாவை தாக்கினால் உரிய பதிலடி: ஐ.நா.வில் ரஷிய அமைச்சா் உறுதி

‘ஐரோப்பிய நாடுகளை ரஷியா முதலில் தாக்காது; ஆனால், ரஷியாவை அவா்கள் தாக்க முற்பட்டால் உறுதியான பதிலடி தரப்படும்’ என்று ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ தெரிவித்தாா். ஐ... மேலும் பார்க்க

இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! - காஸா சுகாதார அமைச்சகம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ... மேலும் பார்க்க