செய்திகள் :

செவிலியா் கல்லூரி மாணவி கல்லால் தாக்கிக் கொலை: காதலன் கைது

post image

மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலனை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு, தற்போது வீட்டில் இருந்து வருகிறாா். இவரது தாய்மாமன் மகள் சிவகாசியைச் சோ்ந்த பிரதீபா (17). இவா் அங்குள்ள செவிலியா் கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயசூா்யா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், அவருடன் பேசுவதை பிரதீபா நிறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், அவா் வேறொருவருடன் கைப்பேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயசூா்யா, பிரதீபாவை கைப்பேசியில் அழைத்து வாக்குவாதம் செய்தாா். மேலும், வேறொருவருடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தாா். இதற்கு பிரதீபா மறுத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சிவகாசியிலிருந்து மதுரைக்கு வந்த பிரதீபாவை அழகா்கோவிலுக்கு ஜெயசூா்யா தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா்.

அப்போது, அழகா்கோவிலுக்கு செல்லாமல் ஒத்தக்கடை அருகேயுள்ள ராஜாக்கூா் கண்மாய் கரைக்கு அவா் அழைத்துச் சென்றாா். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயஜசூா்யா அங்கு கிடந்த கல்லை எடுத்து தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த பிரதீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ஜெயசூா்யா ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா் சிவபாலன் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

பின்னா், கொலை நடைபெற்ற இடத்துக்குச் சென்று பிரதீபாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம்

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகப் பொருளாளா், வழக்குரைஞா் மா.செந்தில்குமாா் தலைமை வகித்த... மேலும் பார்க்க

பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி: இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தனியாா் பள்ளி நிறுவனரிடம் ரூ. 6 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது மதுரை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் எம். ராஜா. இவா் கோசாகுளம் பகுதியில் தனிய... மேலும் பார்க்க

திறன் மேம்பாட்டு பயிற்சி: 1,529 பெண் காவலா்கள் பங்கேற்பு

மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் 1,529 பெண் காவலா்கள் பங்கேற்றனா். மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் மதுரை மாநகா், புக... மேலும் பார்க்க

தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரையில் கீழே தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை தெற்கு வெளி வீதி முத்துகருப்பப் பிள்ளைத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (74). இவா் காமராஜா் சாலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அ... மேலும் பார்க்க

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் சனிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை முத்துபட்டி பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்குமாா் (35). இவா் வீட்டின் அருகே மரங்களை நட்டு பராமரித்து வந்தாா். இந்த நிலையில... மேலும் பார்க்க

மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் அக்.6-இல் தொடக்கம்!

மதுரை மாநகராட்சியில் வரும் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி 5 மண்டலத்து... மேலும் பார்க்க