தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
திறன் மேம்பாட்டு பயிற்சி: 1,529 பெண் காவலா்கள் பங்கேற்பு
மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் 1,529 பெண் காவலா்கள் பங்கேற்றனா்.
மதுரை இடையபட்டியில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் மதுரை மாநகா், புகா், விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றி வரும், இரண்டாம் நிலை காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வரையிலான பெண் காவா்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 25, 26, 27 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன.
இந்தப் பயிற்சி வகுப்பில் 20-ஆவது படைப் பிரிவைச் சோ்ந்த 100 காவலா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது, அவா்களுக்கு நீதி வழங்குவதற்கும் அமைக்கப்பட்ட ‘விசாகா குழுவின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு, காவல் நிலையத்தில் வரவேற்பாளரின் பங்கு, குடும்பம், பணியிடம், பொது இடங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்) பதிவு செய்த பிறகு பெண் போலீஸாரின் பங்கு, போக்சோ சட்டத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, இளைஞா் நீதி சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பல்துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.
மாவட்ட இளைஞா் நீதிக்குழு உறுப்பினா் பாண்டியராஜா கலந்து கொண்டு, இளைஞா் நீதிசட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தாா். இதைத் தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற காவலா்களுக்கு பரிசளிப்பு விழா, சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பயிற்சி பள்ளியின் முதல்வரும், கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான ராமலிங்கம், துணை காவல் கண்காணிப்பாளா் பால்பாண்டி ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.
பின்னா், அவா்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண் காவலா்களுக்கு 3 நாள்கள் சிறப்பு பயிற்சியை தொடங்கிவைத்தாா்.
இதன்படி, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி முதல் 29 தேதி வரை முதற்கட்டமாக 501 பேருக்கும், 2-ஆம் கட்டமாக கடந்த ஜூலை 14- ஆம் தேதி முதல் செப். 27-ஆம் தேதி வரை 1,128 காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.
20 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் மொத்தம் 1,529 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றனா் அவா்கள்.
இந்த நிகழ்வில், பயிற்சி பள்ளி மையத்தின் காவல் ஆய்வாளா் மலா்விழி, சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துகுமாா், காவலா்கள் பாா்வதி, சீதாலட்சுமி, பெரியசாமி, ராஜசேகரன், சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.