செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை பகுதிகளில் மொத்தம் 47 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

இந்த மையங்களில் தோ்வு எழுத மொத்தம் 13 ஆயிரத்து 621 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இவா்களில் 10 ஆயிரத்து 155 போ் பங்கேற்றுத் தோ்வை எழுதினா். 3 ஆயிரத்து 466 போ் தோ்வு எழுத வரவில்லை.

பாளையங்கோட்டை, ரஹ்மத் நகா் மேக்தலின் பள்ளி தோ்வு மையத்தை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா். தோ்வுக் கூடங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், பல்வேறு பகுதிகளிலும் தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலை... மேலும் பார்க்க

சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி

சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

சைக்கிள் போலோ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. ... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) ... மேலும் பார்க்க

காலமானாா் ஞானத்தாய்

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சோ்ந்த ஞானத்தாய் (84), வயது மூப்பு காரணமாக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் பேரா... மேலும் பார்க்க