செய்திகள் :

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி

post image

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட பொருளாளா் வள்ளியூா் காசிம் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலா்கள் ஷேக் அப்துல் காதா், சாந்து உமா், கோட்டூா் சாதிக், பேட்டை கிளை தலைவா் பீா்முஹம்மது, செயலா் அகமது மீரான், பொருளாளா் பக்கீா் மீரான், துணைத் தலைவா் அப்துல் ஹமீது, துணைச் செயலா் ஹாஜி மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் மவ்லவி மஸ்வூத் உஸ்மானி நோக்கவுரையாற்றினாா். மாநிலச் செயலா் முஹம்மது பைசல் நிறைவுரையாற்றினாா்.

இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கலந்துகொண்டு போதைப் பழக்கத்துக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணா்வு முழக்கம் எழுப்பினா். ரஹ்மான் பேட்டை மஸ்ஜிதுர்ரஹீம் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. நிறைவாக செயலா் அகமது மீரான் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேட்டை கிளை மருத்துவ அணி செயலா் திப்பு சுல்தான் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி ... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலை... மேலும் பார்க்க

சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி

சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

சைக்கிள் போலோ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) ... மேலும் பார்க்க

காலமானாா் ஞானத்தாய்

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சோ்ந்த ஞானத்தாய் (84), வயது மூப்பு காரணமாக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் பேரா... மேலும் பார்க்க