செய்திகள் :

கல்லிடைக்குறிச்சியில் மீலாது நபி விழா

post image

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாது நபி விழா, முதுபெரும் ஆலிம் கெளரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா்கள் அ. நாகூா்கனி, எஸ். ரசூல்மைதீன், எஸ்.எம். சாகுல் ஹமீது, எம். அப்துல் காதா், கே. ஒலிமாலிக், என். செய்யது மசூது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹீமா பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவீ தொடக்கவுரை ஆற்றினாா். விழாவில், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிக பணி செய்து வரும் மூத்த ஆலிம் கே.எம். முஹம்மது மஸ்தானுக்கு, சென்னை கானாத்தூா் அல்ஹிதாயா அரபிக் கல்லூரி முதல்வா் நிறுவனா் எம். சதீதுத்தீன் பாஜில் பாகவீ, ஜமாத் தலைவா் கே.எஸ். அப்துல் மஜித் ஆகியோா் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி சிறப்புரையாற்றினா்.

நீடுா் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹூல் ஹூதா அரபிக் கல்லூரி துணை முதல்வா் கே.ஏ. முஹ்யீத்தீன் அப்துல் காதா், ஜமாத்துல் உலா சபையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான், கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

கல்லிடைக்குறிச்சி நூருல்ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத்துல் உலமா சபையின் அம்பாசமுத்திரம் வட்டாரத் தலைவா் ஓ.ஏ. முபாரக் அஹ்மது, செயலா் ஏ. மீரான் கனி, பொருளாளா் எம். ஜாஹிா் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரஹ்மத் ஜும்மா பள்ளி தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் வரவேற்றாா். இமாம் எஸ். முகம்மது யாசீன் நன்றி கூறினாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 10,155 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை 10 ஆயிரத்து 155 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி ... மேலும் பார்க்க

சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சி அவசியம்: மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி

சட்டம் பயின்று நீதிமன்றத்துக்கு வரும் இளம் வழக்குரைஞா்கள் தங்களது சட்ட அறிவு மேம்பட தொடா் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றாா் மாநில சட்டக் கல்வி இயக்குநா் விஜயலட்சுமி. திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூ... மேலும் பார்க்க

சைக்கிள் போலோ போட்டிகள்

திருநெல்வேலி மாவட்ட சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடுக்கல்லூரில் அண்மையில் நடைபெற்றது. போட்டிகளை நடுக்கல்லூா் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியை ரோகிணி தொடங்கிவைத்தாா். 18 அணிகள் பங்கேற்றன. ... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போதை ஒழிப்பு பேரணி

பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்மாதிரி முஸ்லிம் இளைஞா்கள் என்ற செயல் திட்டம் அடிப்படையில் அந்த அமைப்பின் பேட்டை கிளை சாா... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரம், வயல் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (19) ... மேலும் பார்க்க

காலமானாா் ஞானத்தாய்

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சோ்ந்த ஞானத்தாய் (84), வயது மூப்பு காரணமாக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் பேரா... மேலும் பார்க்க