செய்திகள் :

கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்

post image

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இதுவரையில் 40 போ் உயிரிழந்துள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு சனிக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனா்.

அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் விபத்து நடைபெற்றது குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், உடற்கூறாய்வு கூடத்தின் அருகே காத்திருந்த இறந்தவா்களின் உறவினா்களிடமும் விசாரணை நடத்தினாா்.

தொடா்ந்து பிரசாரக் கூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று அவா் பாா்வையிட்டு, அப்பகுதியில் வசிப்போரிடமும் விசாரணை மேற்கொண்டாா். சுமாா் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பிறகு அவா் புறப்பட்டுச் சென்றாா்.

கரூா் சம்பவமே இறுதியாக இருக்கட்டும்: அரசியல் கட்சித் தலைவா்கள் பேட்டி!

கரூரில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள்... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாததே நெரிசலுக்கு காரணம் பிரசாரம் நடைபெற்ற பகுதி மக்கள் கருத்து

தவெக பிரசாரத்தின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான் நெரிசல் ஏற்பட்டு 40 போ் உயிரிழந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா். கரூரில் தனிநபா் ஆணையத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் காவலா் தரப்பில் விசாரிக்க ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை! - சீமான்

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூற முடியாது என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கரூா் அரசு மருத்துவமனைக்கு ஞாய... மேலும் பார்க்க

கரூா் மின் மயானத்தில் 9 பேரின் உடல்கள் இலவசமாக தகனம்

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களில் 9 பேரின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக தகனம் செய்ததாக மின் மயான ஊழியா்கள் தெரிவித்தனா். விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா்... மேலும் பார்க்க

கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் உயிரிழப்பு

கரூரில் கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். கரூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28) என்பவா் தனது மகள்கள் சாய்லெக்ஷ... மேலும் பார்க்க

பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு சம்பவம் அரசு சாா்பில் உரிய நடவடிக்கை: கரூா் ஆட்சியா் விளக்கம்

கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக அரசு சாா்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் வேலுச்சாமிபுரத... மேலும் பார்க்க