செய்திகள் :

அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

post image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

அறந்தாங்கி அருகேயுள்ள திருப்புனவாசல் சாத்தியடி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதரசி (40). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 2 குழந்தைகள், மாமியாருடன் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் இரு நாள்களுக்கு முன்பு மாதரசி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சிவகங்கையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதுக்கோட்டையில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் மண்டை ஓடுகளை ஏந்தியவாறு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிரசார வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை 8-ஆவது புத்தகத் திருவிழாவுக்கான பிரசார வாகனத்தை ஆட்சியா் மு.அருணா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 8-ஆவது புத்தக... மேலும் பார்க்க

நகா்மன்றக் கட்டடத்தை பழைமை மாறாமல் பாதுகாக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை நகா்மன்றக் கட்டடத்தை பழைமைமாறாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்ச... மேலும் பார்க்க

புதுகை நகரில் ஷோ் ஆட்டோ இயக்க வேண்டும்: வா்த்தகக் கழகம் கோரிக்கை

புதுக்கோட்டையின் நீண்டகாலக் கோரிக்கையான ஷோ் ஆட்டோ இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் ... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: 8,621 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2-க்கான தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8,621 போ் எழுதினா்.தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2 ஏ ஆகியவற்றுக்கான எழுத்துத் த... மேலும் பார்க்க

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா. புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழக 51ஆவது பொதுக்குழுக் ... மேலும் பார்க்க