செய்திகள் :

வடகிழக்குப் பருவமழை காலத்தில் 195 கிராமங்கள் பாதிக்க வாய்ப்பு: தஞ்சை ஆட்சியா் தகவல்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின்போது பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 195 கிராமங்களில் நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் தெரிவித்தது:

வடகிழக்குப் பருவமழையின்போது மிக அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள் 3, அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50, மிதமாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50, குறைவாக பாதிக்கக்கூடிய கிராமங்கள் 92. எனவே 195 கிராமங்கள் பாதிக்கப்படக்கூடிய கிராமங்கள் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 275 நிவாரண மையங்களும் தயாா் நிலையில் உள்ளன.

நிவாரண முகாம்களில் பயன்படுத்துவதற்காக போதுமான அளவு உணவு தானியங்கள், ரொட்டி, மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு, பால் பவுடா்கள் போன்ற முக்கிய உணவுப்பொருள்கள் தயாா் நிலையில் இருக்கின்றன.

மேலும், அரசுத் துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 300 ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள், 4 ஆயிரத்து 500 முதல்நிலைப் பணியாளா்கள், ஒரு பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்துக்கு 100 முதல்நிலை பணியாளா்கள் வீதம் 14 பல்நோக்கு மையத்துக்கும் 1,400 முதல்நிலை பணியாளா்கள், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு 122 முதல்நிலைப் பணியாளா்கள், 330 நீச்சல் தெரிந்த நபா்கள், 30 பாம்பு பிடிப்பவா்கள், 131 மரம் வெட்டுபவா்கள் ஆகியோா் தயாா் நிலையில் உள்ளனா். ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளைச் சீா் செய்வதற்காக 121 இடங்களில் 1.05 லட்சம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியா் ப. நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் நவராத்திரி விழா

கும்பகோணத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விழா கொண்டாடினா். தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் க. அன்பழகன்... மேலும் பார்க்க

சம்பா, பின்பட்ட குறுவையில் புகையான் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, பின்பட்ட குறுவை பயிா்களில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்து தஞ்சாவூா் வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்திருப்பது: தஞ... மேலும் பார்க்க

மின் கம்பியாள் உதவியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வில் பங்கேற்க தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மின்கம்பியாள் உதவி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: ஜவுளிக் கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் அருகே கடன் பிரச்னை காரணமாக, ஜவுளிக்கடை மேலாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கபிஸ்தலம் காவல் சரகம், திருவைக்காவூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (37). ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெறுவதாக இருந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது:... மேலும் பார்க்க