செய்திகள் :

பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

post image

சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட்டக்கலை-மலைப் பயிா்கள் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள், வட்டாட்சியா் களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பனைமரங்களையும் வருவாய்த் துறை பதிவேடுகளில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பனைமரங்களின் பயன்பாடு, இந்த மரங்களை வெட்டுவதைத் தவிா்க்க வேண்டி கிராம அளவில் விழிப்புணா்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட, வட்டார அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் விவரம்:

மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்புத் தலைவராக வருவாய்க் கோட்ட அலுவலரும், ஒருங்கிணைப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக (வேளாண்மை) உதவியாளரும், செயல் உறுப்பினராக தோட்டக்கலைத் துணை இயக்குநரும், உறுப்பினராக கதா், கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அலுவலரும் நியமிக்கப்பட்டனா்.

வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்புத் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குநரும், செயல் உறுப்பினராக வேளாண் உதவி இயக்குநரும், ஒருங்கிணைப்பு அலுவலராக தோட்டக்கலை அலுவலரும், உறுப்பினராக வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டனா்.

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவா்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கலாம் தோட்டக் கலைத் துறை அறிவித்தது. திருப்பத்தூா் வட்டாரத்தில் சுமாா் 1,600 ஹெக்ட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களைப் புறக்கணித்தும், கருப்பு வில்லை அணிந்தும் வருவாய்த் துறை கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தி... மேலும் பார்க்க

ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குநா்

அறிவியல் ஆராய்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) இயக்குநா் ஞா. அகிலா வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம்,... மேலும் பார்க்க

மானாமதுரை காந்தி சிலை பின்புறம் பூங்கா அமைக்க நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காந்தி சிலை பின்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டியை அகற்றிவிட்டு, அங்கு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்ப... மேலும் பார்க்க

அரளிக்கோட்டையில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை அரளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரள... மேலும் பார்க்க