செய்திகள் :

அமெரிக்காவில் இருந்து 400 ஈரான் நாட்டினர் வெளியேற்றம்!

post image

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக, அந்நாட்டு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், அமெரிக்காவில் குடியேறிய 120 ஈரான் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 400-க்கும் அதிகமான ஈரான் நாட்டினர் மீண்டும் தாயகம் அனுப்பப்படுவார்கள் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 2 நாள்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் ஈரானியர்களின் முதல் குழு விமானம் மூலம் தலைநகர் தெஹ்ரானை வந்தடைவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு ஊடகங்களில் இதுகுறித்த செய்திகள் முதலில் வெளியாகின. ஆனால், ஈரான் அரசுடனான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அரசின் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, நிகழாண்டில் (2025) ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் நடைபெற்ற 12 நாள் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

The Iranian government has announced that 120 Iranians who are illegally residing in the United States will soon be deported.

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் செவ்வாய்க்கிழமை 10 பேர் கொல்லப்பட்டனர்.மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்து... மேலும் பார்க்க

காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

காஸாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில், பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள... மேலும் பார்க்க

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 போ் உயிரிழப்பு

கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்: அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு

பபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள்கிழமை அறிவித்தது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நாதலி டிரோயின் ஆகியோா் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க