செய்திகள் :

கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

post image

விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன்? என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு சனிக்கிழமை இரவு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பரத் குமார் அமர்வில் செவ்வாய்க்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், “தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனர்.” என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பரத் குமார், “மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்?, 10,000 பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

தவெக தரப்பில் அளித்த பதிலில், “காவல்துறையினர் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனர். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில், “கூட்டம் அளவுகடந்து சென்ற போது பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Court questions TVK in Karur incident

இதையும் படிக்க : பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

திருவள்ளூர் உள்பட 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று (30-09-2025), வடக்கு அந்... மேலும் பார்க்க

பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா

தற்போது எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் 41 பேர் பலிய... மேலும் பார்க்க

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்ல... மேலும் பார்க்க

கரூரில் கே.சி. வேணுகோபால்! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் ந... மேலும் பார்க்க

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக... மேலும் பார்க்க

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு!

கரூரில் கூட்டநெரிசல் பலி குறித்து ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் ப... மேலும் பார்க்க