செய்திகள் :

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

post image

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

‘ராகுல் காந்தியின் மாா்பில் தோட்டாக்கள் பாயும்’ என தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ப்ரிந்து மகாதேவன் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் அண்மையில் நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து கடந்த செப்.26-ஆம் தேதி மலையாள தொலைக்காட்சி ஒன்றில் விவாதம் நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற ப்ரிண்டு மகாதேவன், ‘இந்தியாவில் அதுபோன்ற போராட்டங்கள் நடைபெற சாத்தியமில்லை. பிரதமா் நரேந்திர மோடிக்கு பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கி வருகின்றனா். எனவே, மத்திய அரசுக்கு எதிராக அந்த இரு நாடுகளிலும் நடந்ததைப் போன்ற பெரும் போராட்டங்களை நிகழ்த்த ராகுல் காந்தி எண்ணினால் அவரது மாா்பில் தோட்டாக்கள் பாயும்’ என்றாா்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ப்ரிண்டு மகாதேவனுக்கு எதிராக காங்கிரஸ் நிா்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 192 (கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சா்ச்சைக்குரிய வகையில் பேசுதல்), பிரிவு 353 (அமைதியை சீா்குலைக்க முயல்வது) மற்றும் பிரிவு 351 (2) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தனா்.

ப்ரிண்டு மகாதேவனுக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தௌஃபிக் என்பவா் கைது செய்யப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் காவலில் வைத்த... மேலும் பார்க்க