செய்திகள் :

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து புதிய வரலாறு படைத்த நேபாளம்!

post image

டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து நேபாள அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணி டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

கத்துக்குட்டி அணி எனக் கருதப்படும் நேபாள அணி, இந்தத் தொடரின் முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்திருந்தது.

இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நேபாள கேப்டன் ரோஹித் பவுடல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷெய்க் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களும், சந்தீப் ஜா 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் அக்கீல் ஹொசைன் மற்றும் கைல் மையர்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேபாளத்தின் பந்துவீச்சில் சிக்கி சின்னாப்பின்னமானது. முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 17. 1 ஓவர்களில் வெறும் 83 ரன்களில் சுருண்டது. இதன்மூலம், நேபாள அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 21 ரன்களும், அக்கீம் 17 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

நேபாள அணியில் முகமது ஆதில் ஆலம் 4 விக்கெட்டுகளும், குஷல் புர்தேல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்த தொடரை நேபாள அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் உள்பட 29 டி20 தொடர்களில் விளையாடியுள்ள நேபாள அணி இதுவரை 5 தொடர்களை வென்றுள்ளது. அதில், முழு உறுப்பினர் தகுதிபெற்ற அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

Nepal shocks West Indies by 90 runs and wins T20 series

இதையும் படிக்க... இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேலுமொரு மே.இ.தீவுகள் வீரர் விலகல்!

இந்திய ராணுவத்தால் பலியானோரின் குடும்பத்துக்கு பரிசுத் தொகையை வழங்கிய பாகிஸ்தான் அணி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பங்களுக்கு ஆசியக் கோப்பையில் பெற்ற பரிசுத் தொகையை வழங்க பாகிஸ்தான் அணி முடிவுசெய்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் ... மேலும் பார்க்க

38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 38 வயதான முதல்தர கிரிக்கெட் வீரருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வ... மேலும் பார்க்க

இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்

மகளிருக்கான 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 30) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டியில், இந்தியா, நடப்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேலுமொரு மே.இ.தீவுகள் வீரர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக இன்று (செப்டம்பர் 29) அறிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

பாகிஸ்தான் அணி வீரர்கள் நிறைய பேசியதாகவும், அதற்கு தனது பேட்டிங் மூலம் பதிலளித்ததாகவும் இந்திய வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நேற்று ந... மேலும் பார்க்க