செய்திகள் :

தவெக விஜய்: "நம்மால் நடந்துவிட்டதென்ற குற்ற உணர்ச்சியால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்" - ஆ.ராசா MP

post image

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து பெருந்துயரம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தவெக தரப்பிலிருந்து இன்னும் யாரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.

கரூர் துயரம் - தவெக
கரூர் - தவெக

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக-வின் துணை பொதுச்செலயாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா, "கரூரில் விஜய் கலந்துகொண்ட பிரசார நிகழ்வில் விலைமதிக்க முடியாத 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.

2001-ல் கலைஞர் கைதானபோது அதைக் கண்டித்து பேரணி நடந்தபோது அரசின் ஆதரவோடு வன்முறையைத் தூண்டிவிட்டார்கள். அதில் பலபேர் காயமடைந்தார், உயிரிழந்தார்கள்.

அப்போது கலைஞர் தனது உயிரையும் பொருட்படுத்தாது அதே இடத்துக்குச் சென்றார். எப்போது பதற்றம் வருகிறதோ, மக்களுக்குத் தேவை வருகிறதோ எங்களது உயிரையும் பணயம் வைத்து களத்தில் நிற்பதுதான் தி.மு.க வரலாறு. அதுபோலவே எங்களுடைய முதல்வரும் செய்திருக்கிறார்.

இதில் அரசியல் கிடையாது. ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் சில கேள்விகள் இருக்கின்றன.

களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள் ஏன் கரூரில் களத்தில் நிற்கவில்லை. செய்தியறிந்த பிறகு அவசர அவசரமாக செய்தியாளர்களைச் சந்திப்பதற்குக்கூட வெட்கப்பட்டுக்கொண்டு, பயந்துகொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்?

இப்போது ட்வீட் போடுபவர்கள், கூட இருப்பவர்கள் எல்லாம் ஏன் களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை? ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை?

நம்மால்தான் இது நடந்தது என்ற குற்ற உணர்வால்தான் அவர்கள் ஒளிந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

 தி.மு.க எம்.பி ஆ.ராசா
தி.மு.க எம்.பி ஆ.ராசா

அதையெல்லாம் விட முக்கியமான கொடுமை, அந்த இயக்கத்துக்கு பணம் கொடுக்கின்ற முக்கியமான இடத்தில் இருக்கின்ற ஆதவ் அர்ஜுனா ஒரு ட்வீட் போடுகிறார்.

அதில், நேபாளத்தில் நடந்ததைப் போல இங்கு ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்கிறார்.

அமைதியாக இருக்கின்ற, வளர்ச்சியை நோக்கி நகர்கின்ற தமிழ்நாட்டில் ஒரு புரட்சி வர வேண்டும் என்று இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தைப் பதிவிட்டு, அதற்கு விமர்சனம் வந்ததும் உடனே நீக்கிவிட்டார்.

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா - விஜய்

அந்தப் பதிவை எடுக்கின்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கிறார்கள். அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

ஆனால், என்னுடைய கேள்வி அந்தக் கட்சியின் தலைவர் அவரைக் கண்டித்தாரா அல்லது செய்தது தவறு என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரா?

எந்தவித அரசியல் புரிதலும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதா என்பதை நான் கேட்கிறேன்" என்று கேள்வியெழுப்பினார்.

கரூர் மரணங்கள்: "பக்காவான RSS, BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது" - விஜய் குறித்து ஆளூர் ஷாநவாஸ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.இன்று இதுகுறித்து வீடியோ வெளியிட்ட விஜய், "கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்ல... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" - CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மா... மேலும் பார்க்க

விஜய் வீடியோவும் சில கேள்விகளும்: "உங்களின் கிரீடத்தை முதலில் கழற்றி வையுங்கள் விஜய்!"

கரூர் பெருந்துயர் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவரைக் காண வந்து உயிரைப் பறிகொடுத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார். அதில், 'இரண்டு வா... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் கூட நெரிசலில் சிக்கு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் மாநில அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ், ஏ.டி.ஜி.பி டேவிட்சன், மருத்துவத்துற... மேலும் பார்க்க

"கரூர் உண்மையை மறைக்க நாடகத்தை நடத்துகிறது இந்த ஸ்டாலின் அரசு" -எடப்பாடி பழனிசாமியின் கேள்விகள்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தத் துயர சம்பவம்... மேலும் பார்க்க